Sunday, March 29, 2009

அம்மா


என் அம்மாவிற்கு
உவமை சொல்ல

முயல்கிறேன்

என் அம்மாவிற்கு

உவமையாக

கடவுளை சொன்னால்

வேண்டாம்

கடவுள் என்றால்
மதம் இறுக்கும்

மதம் இருந்தால்

சண்டைகள் இருக்கும்


என் அம்மாவிற்கு

உவமையாக

காற்றை சொன்னால்

வேண்டாம்
காற்று

மரத்தின் தலை அசைத்தால்

தென்றல்

மரத்தின் வேரை அசைத்தால்

புயல்

என் அம்மாவிற்கு

உவமையாக
மழையை சொன்னால்

வேண்டாம்

மழையால் நிலத்தில்

விதைத்தது முளைக்கும்

அதுவே வெள்ள்மானால்

முளைத்தது அனைத்தும் மூழ்கும்


உலகில் குறையே

இல்லாத நிறை எது


எல்லா
உவமைகளும் உமையாய் நிற்கும்

இப்போது
புரிகிறது
என்
அம்மாவிற்கு
உவமை

என்
அம்மா மட்டும்தான்

6 comments:

  1. romba nalla iruku arul ama unmai dan ammaku nigar amma dan dat to ur mom is really great....

    ReplyDelete
  2. Super.........oru ammava ennaku romba santhosama irruku.........un ammavai patri nee eazhuthi irrupathu........Vazhthukal........

    Parimala Vageesan

    ReplyDelete