
வார்த்தைகளை சிந்தாமல்
காதில் கொட்டும்
வார்த்தை புனல் செல்
நாம் சொல்வதை
எவர் காதிலும்
திர்த்து சொல்லாத
நேர்மையாளன் செல்
நீங்கள்
புன்னகையோடு பேசினாலும்
கோபத்தோடு பேசினாலும்
உணர்வு வயப்படாத
ஞானி செல்
காதலர்களுக்கு கையடக்க
தூதுவன் செல்
மதியாதார் தலை வாசல் மிதியாதே
இது பழமொழி
அழைப்பை ஏற்ர்காதார்
காதினில் நுழையாதே
இது செல்மொழி
மனிதனுக்கும் சரி
செல்லுக்கும் சரி
காசு இருந்தால்தான் மதிப்பு
காசு இருந்தால்
உன் பேச்சை மற்றவர் கேட்கலாம்
காசு இல்லையென்றால்
மற்றவர் பேச்சைத்தான்
நீங்கள் கேட்க முடியும்
எத்தனை மணி நேரம்
செல்லில் பேசினாலும்
சில மணித்துளிகள்
முகம் பார்த்து
புன்னகைக்கும் சுகத்திற்கு
ஒப்பாகுமா ?
nalla iruku arul unga kavicell
ReplyDeleteThank you
ReplyDelete