Sunday, March 29, 2009

அம்மா


என் அம்மாவிற்கு
உவமை சொல்ல

முயல்கிறேன்

என் அம்மாவிற்கு

உவமையாக

கடவுளை சொன்னால்

வேண்டாம்

கடவுள் என்றால்
மதம் இறுக்கும்

மதம் இருந்தால்

சண்டைகள் இருக்கும்


என் அம்மாவிற்கு

உவமையாக

காற்றை சொன்னால்

வேண்டாம்
காற்று

மரத்தின் தலை அசைத்தால்

தென்றல்

மரத்தின் வேரை அசைத்தால்

புயல்

என் அம்மாவிற்கு

உவமையாக
மழையை சொன்னால்

வேண்டாம்

மழையால் நிலத்தில்

விதைத்தது முளைக்கும்

அதுவே வெள்ள்மானால்

முளைத்தது அனைத்தும் மூழ்கும்


உலகில் குறையே

இல்லாத நிறை எது


எல்லா
உவமைகளும் உமையாய் நிற்கும்

இப்போது
புரிகிறது
என்
அம்மாவிற்கு
உவமை

என்
அம்மா மட்டும்தான்

Sunday, March 22, 2009

அலைபேசி


வார்த்தைகளை சிந்தாமல்
காதில் கொட்டும்
வார்த்தை புனல் செல்

நாம் சொல்வதை
எவர் காதிலும்
திர்த்து சொல்லாத
நேர்மையாளன் செல்

நீங்கள்
புன்னகையோடு பேசினாலும்
கோபத்தோடு பேசினாலும்
உணர்வு வயப்படாத
ஞானி செல்

காதலர்களுக்கு கையடக்க
தூதுவன் செல்

மதியாதார் தலை வாசல் மிதியாதே
இது பழமொழி
அழைப்பை ஏற்ர்காதார்
காதினில் நுழையாதே
இது செல்மொழி

மனிதனுக்கும் சரி
செல்லுக்கும் சரி
காசு இருந்தால்தான் மதிப்பு

காசு இருந்தால்
உன் பேச்சை மற்றவர் கேட்கலாம்
காசு இல்லையென்றால்
மற்றவர் பேச்சைத்தான்
நீங்கள் கேட்க முடியும்

எத்தனை மணி நேரம்
செல்லில் பேசினாலும்
சில மணித்துளிகள்
முகம் பார்த்து
புன்னகைக்கும் சுகத்திற்கு
ஒப்பாகுமா ?

Saturday, March 7, 2009

தண்ணீர் ! தண்ணீர் !

முன்பு
காசை தண்ணீர் போல்
செலவு செய்பவனை
ஊதாரி என்பார்கள்
இனி
காசை தண்ணீர் போல்
செலவு செய்பவனை
கருமி என்பார்கள்
முன்பு
பாலில் தண்ணீர் கலந்தால் குற்றம்
இனி
தண்ணிரில் பால் கலந்தால் பெருங்குற்றம்
செய்திகள் இப்படி வரலாம்
தண்ணீர் கடத்திய அமைச்சர்
தனி சிறையில் அடைப்பு
தண்ணீர் கடத்தல் தடுக்க
தனி படை அமைப்பு
சமுகம் இப்படி மாறலாம்
குடத்தில் தண்ணீர் இருந்தால் பணக்காரர்
தொட்டியில் தண்ணீர் இருந்தால் லட்சாதிபதி
குளம் வைத்திருந்தால் கோடிஸ்வரன்

புத்திசாலிகள் வங்கியில்
தண்ணிரை டெப்பாசிட் செய்வார்கள்
மக்கள்
இரத்தம் சிந்தினால் அல்ல
தண்ணீர் சிந்தினால் மட்டும்
கண்ணீர் விடுவார்கள்
இந்த இழி நிலை தடுக்க
மரங்களை வளர்த்து
வேர்களால் வேலி
அமைப்போம்
தண்ணிரை காக்க
நாளைய சமுகத்தின்
கண்ணிரை போக்க.......

Tuesday, March 3, 2009

குழப்பம்






நீ என் அருகில்

இருக்கும் போதெல்லாம்

எனக்கிருக்கும் ஒரே குழப்பம்

நான் யார் பேச்சை கேட்பது

உன் கண்களின் பேச்சையா ?

உன் உதடுகளின் பேச்சையா ?




என்ன மாயமோ


நீ ஒவ்வொரு முறையும்
சின்னதாய் தலைசாய்த்து
புன்னகைக்கும் போதெல்லாம்
நான் உன் வசம் முழுதாய்
சாயும் மாயம் நடக்கிறது !

Monday, March 2, 2009

கட்டுப்பாடு


திரியில் எரிந்தால்
அது தீபம்
திரிந்து எரிந்தால்
அது தீ !

அமைதியாய் ஓடினால்
அது ஆறு
அடங்காமல் ஓடினால்
அது வெள்ளம்

நண்பா நீ
தீயின் சக்தி கொண்ட
தீபமாய் இரு

வெள்ளத்தின் வீரியம் கொண்ட
ஆறாய் இரு